ஈரோடு
ஆடி மாதம் முடிந்து ஆவணி வந்தா டாப்புல போவோம் அப்புடின்னு சினிமாவுல வசனம் வரும். அதுபோல அதிருஷ்டம் லரோடு மாவட்டம் பவானி காவல் எல்லையில் உள்ள காவல் நிலையங்களுக்குக் கிடைத்தது.
ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்த நாள் என்பதால் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமண ஜோடிகளால் கோவில்கள் நிரம்பி வழிந்தன. கூட்டம் அதிகமானதால் கோவில்களின் உள்ளே அனுமதிக்காததால் பல திருமண ஜோடிகள் கோவில் நுழைவு வாசலில் நின்று திருமணம் செய்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டம் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையம், அந்தியூர், அம்மாபேட்டை ஆகிய காவல் நிலையங்களில் 12 காதல் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர் .
ஒரே நேரத்தில் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 7 காதல் ஜோடிகளும், அந்தியூர் காவல் நிலையத்தில் 3 காதல் ஜோடிகளும், அம்மாபேட்டை காவல் நிலையத்தில் 2 காதல் ஜோடிகளும் அடுத்தடுத்து பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
இதனால் காலை முதல் மாலை வரை பவானி அனைத்து மகளிர் காவல் நிலையம் காதல் ஜோடிகளின் பெற்றோர்களை அழைத்து பேசி சமாதானம் செய்வதிலேயே படு பிசியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.