தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் ஆரல்வாய் மொழி, தோவாளை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கிருஷ்ணசாமி கோயில் திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் அவர்களுக்கு பாய், படுக்கை விரிப்புகளை வழங்கினார். தொடர்ந்து. திருப்பதி சாரம், குமாரகோயில் பகுதிகளில் குளங்களில் ஏற்பட்ட பாதிப்பையும் முதல்வர் பார்வையிட்டார். முதல்வருடன் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கே.என்.நேரு, கே.ஆர்.பெரியகருப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், விஜய் வசந்த் எம்.பி. எம்.எல்.ஏக்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ், முன்னாள் அமைச்சர் என்.சுரேஷ்ராஜன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.