தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
நீலகிரி:-
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சயானிடம் காவல்துறையினர் மீண்டும் விசாரணை நடத்துகின்றனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவு, சசிகலா சிறை சென்றதை தொடர்ந்து 2017ல் கோடநாடு பங்களா காவலாளி கொலை செய்யப்பட்டார். மேலும், அங்கிருந்து சில பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது.
இதுதொடர்பான விசாரணைக்கு போலீஸ் சம்மன் அனுப்பியதால் பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சயான் ஆஜரானார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.