சென்னை
தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரம் மதுரை. ஆனால் கடும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் மதுரையம் உண்டு.
குறிப்பாக தென்மாவட்ட மக்கள் அதிகம் வந்து செல்லும் முக்கிய நகராக விளங்கும் மதுரையில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்துக் கொண்டே உள்ளது.. அனால் மக்கள் தொகை பெருக்கத்ததிற்கு ஏற்ப மதுரை நகரத்தில் சாலை வசதிகள் இல்லை. அதுபோன்று சாலை போக்குவரத்தை தவிர இதர போக்குவரத்து வசதி இல்லை.
எனவே மதுரையில் வசிக்கும் மக்கள் பெரும்பாலான நாள்களில் கடும் போக்குவரத்து நெருக்கடியைச் சந்தித்து வருகின்றார்கள். எனவே மதுரை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் போன்ற திட்டங்களை அமல்படுத்த வேண்டுமென தொடர் கோரிக்கை எழுந்து வந்தது.
இந்நிலையில் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்த போது நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து விரைவில் ஆய்வுப் பணிகள் துவங்கும் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில், மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்கான பணிகளை மேற்கொள்வதற்கான டெண்டர் அறிவிப்பை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.