சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரத்தைப் பொறுத்து பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. கடந்த மே மாதத்தில் இருந்து பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.
இந்த விலை உயர்வால், ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டு வந்தது. அதன்படி, சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 100.75 ரூபாய், டீசல் லிட்டருக்கு 93.91 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் 101.06 ரூபாய்க்கும், டீசல் விலை 15 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் 94.06 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனிடையே, தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையுயர்வை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.