சென்னை:-
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த மாணவி ஜெயஸ்ரீ தீ வைத்து கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் சிறுமியின் கொலை சம்பவத்தை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனங்கள் தெரிவித்து வருவதோடு அவரது குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கி வருகின்றனர்.
தேமுதிக கட்சி சார்பில், அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அந்த குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஒரு லட்ச ரூபாய் உதவித்தொகை அளித்துள்ளார். பின்னர் மாணவி ஜெயஸ்ரீயை கொன்றவர்களை என்கவுண்டர் செய்யவேண்டும். அப்படி செய்தால் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அது ஒரு பாடமாக அமையும் என தெரிவித்திருந்தார்.
அதேபோல் பாஜக தலைவர் முருகனும் நேரில் சென்று மாணவியின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறியனார்
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் முருகன் மீதும், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் 40க்கும் மேற்பட்டோருடன் கூட்டமாக சென்றதாக திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.