16வது சட்ட பேரவையின் முதல் கூட்டத் தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தொடங்குகிறது. தற்காலிக சபாநாயகர் கு. பிச்சாண்டி புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நான்கு வேட்பாளர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலி-நயினார் நாகேந்திரன், மொடகுருச்சி-C.K. சரஸ்வதி, நாகர்கோவில்- MR.காந்தி, கோயம்புத்தூர் தெற்கு-வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை சட்டமன்றதுக்கு வழியனுப்பும் விழா தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் L.முருகன் மற்றும் மாநில நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் L.முருகன் கூறியதாவது, தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது. 20 ஆண்டுகளில் அசைக்க முடியாத நம்பிக்கையை கொடுத்துள்ளது. எங்களை இகழ்ந்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளோம் என்று கூறினார்.
தவறுகளை சுற்றி கட்டும் கட்சியாக இருக்கும். ஆக்க பூர்வமான முடிவுகளை எடுக்கும். எங்களது வெற்றிக்கு வேல் யாத்திரை தான் காரணம். தேர்தல் மேற்பார்வையாளர் சிடி ரவி அவர்களுக்கு நன்றி. கடைக்கோடி தொண்டனுக்கும் இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன் மற்றும் தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என்ற நிலையில் இருந்து தற்போது தமிழகத்தில் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரி மாநிலத்திலும் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் என சாதனை படைத்துள்ளது எனக் கூறினார்.
காங்கிரஸ் மற்றும் திமுக தான் நீட் தேர்வை கொண்டு வந்தது. இப்போது நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வருவது மக்களை ஏமாற்றும் செயல் எனவும்
நான்கு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார்கள் ( INNOVA) பரிசாக வழங்கப்படும் எனவும் கூறினார்.