தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்த கர்ப்பிணி பெண்…
சென்னை பூந்தமல்லியை சேர்ந்த கண்ணப்பன் -புஷ்பா தம்பதியினருக்கு 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
நேற்றிரவு கணவன் கண்ணப்பன் வெளியே சென்றுள்ளார். அப்போது 3 மாத கர்ப்பிணியாக இருந்த புஷ்பா வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் புஷ்பா பாம்பு கடித்து வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் திருமணமாகி 6 மாதங்களில் புஷ்பா பாம்பு கடித்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.