மதுரை:
கரூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை காவலர் மாசிலாமணி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அம்மனுவில் தமிழக காவல்துறையில் போலீசாரின் எண்ணிக்கையை உயர்த்தவும், காலி பணியிடங்களை நிரப்பவும், காவலர்களின் ஊதியத்தை உயர்த்தவும் அரசுக்கு உத்தரவிடவேண்டும் என கூறியிருந்தார்.
தமிழக காவலர்களின் குறைகளை களைய ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் போலீஸ் ஆணையம் அமைக்கப்பட வேண்டும், போலீசாருக்கு 8 மணி நேர பணி முறையை விரைவில் பின்பற்ற வேண்டும் என ஐகோர்ட் ளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆட்கள் பற்றாக்குறை காரணமாக காவலர்கள் மன அழுத்தத்துடன் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் பணி மகத்தானது. இப்பணியை வேறு பணிகளுடன் ஒப்பிட முடியாது. 3 மாதத்தில், ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் ஆணையத்தை அமைக்க வேண்டும். இந்த குழுவில் மன நல நிபுணர்கள், உளவியலாளர் , சமூக ஆர்வலர், போலீசார், வழக்கறிஞர் இடம்பெற வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
காவலர்களை 3 ஷிப்டுகளில் பணியாற்ற அனுமதிப்பதோடு 8 மணி நேர வேலை முறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.