தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் பல புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட நிலையில் 10 புதிய மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படவில்லை. கடந்த 2019 இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கடந்த ஆண்டு ஜனவரியில் பொறுப்பேற்று நிலையில் விடுபட்ட மாவட்டங்களில் உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தாமலேயே இருந்தது.
இதனிடையே, கொரோனா பரவல் காரணமாக உள்ளாட்சி தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் தள்ளி வைத்து விட்டது.
இந்நிலையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருந்த நிலையில் தமிழக அரசி சார்பில் மேலும் 6 மாத காலம் அவகாசம் கேட்கப்பட்டது.
ஆனால் இதை ஏற்கமறுத்த நீதிமன்றம் செப்டம்பர் 15ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடித்து முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.