தமிழகம்

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும்- உச்சநீதிமன்றம் உத்தரவு…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் செப்டம்பருக்குள் தேர்தலை  நடத்த உச்சநீதி மன்றம் உத்தரவு… – www.patrikai.com

கடந்த அதிமுக ஆட்சியில் பல புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட நிலையில் 10 புதிய மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படவில்லை. கடந்த 2019 இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.

புதிதாக தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கடந்த ஆண்டு ஜனவரியில் பொறுப்பேற்று நிலையில் விடுபட்ட மாவட்டங்களில் உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தாமலேயே இருந்தது.

ALSO READ  பிடனின் தேர்தல் வாக்குறுதி…….

இதனிடையே, கொரோனா பரவல் காரணமாக உள்ளாட்சி தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் தள்ளி வைத்து விட்டது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வரும் செப்டம்பருக்குள் உள்ளாட்சி தேர்தல் - உச்சநீதிமன்றம்  உத்தரவு | Dinamaalai | Latest Tamil News |

இந்நிலையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ALSO READ  மாணவர்கள் உயிருடன் விளையாட போகிறீர்களா?- ஆந்திர அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி..!

இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருந்த நிலையில் தமிழக அரசி சார்பில் மேலும் 6 மாத காலம் அவகாசம் கேட்கப்பட்டது.

ஆனால் இதை ஏற்கமறுத்த நீதிமன்றம் செப்டம்பர் 15ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடித்து முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மாற்றுத்திறனாளிகளுக்கு 1000 ரூபாய் நிவாரணம்- முதல்வர் பழனிசாமி…. 

naveen santhakumar

விதிமுறைகளை மீறிய உணவகங்கள்; சீல் வைத்த மாநகராட்சி ஊழியர்கள்

News Editor

மாணவர்களை தாக்கும் கொரோனா… 46 பேருக்கு தொற்று உறுதி!

naveen santhakumar