சென்னை:
ரஜினியையும், கமலையும் அடிக்கிற அடியில், இனி எந்த நடிகரும் அரசியலுக்கு வர பயப்பட வேண்டும் என சில தினங்களுக்கு முன் சீமான் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான், விஜய் என் தம்பி என்றார். சூர்யாவைப் போல, விஜய்யும் மக்கள் பிரச்னைகக்காக குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.மேலும் விஜய் அரசியலுக்கு வருவதை எதிர்க்கவில்லை என்றும், திரை கவர்ச்சியை மட்டுமே நம்பி அரசியலுக்கு வராமல், மக்களுக்கான போராட்டங்களில் ஈடுபட்டு விட்டு, அரசியலுக்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பிரபாகரனை ஆதரித்ததை விட, வேறு எதையும் எம்ஜிஆர் சாதிக்கவில்லை எனத் தெரிவித்த சீமான்,முதலமைச்சர் தகுதிக்கான பதவி மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், அன்புமணி, திருமாவளவன் உள்ளிட்டோருக்கு இல்லையா??? என்றும், ரஜினிக்கு மட்டும் தான் முதலமைச்சராக தகுதி உள்ளதா என்றும் கேள்வி எழுப்பினார்.