சென்னை :
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான முதன்மை கல்வி அலுவலர்களுக்கானஆலோசனை கூட்டம், செப்டம்பர் 14ம் தேதி சென்னையில் நடைபெறும் என, பள்ளி கல்வி ஆணையாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்
தமிழகத்தில், 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பதற்கான ஏற்பாடுகள் குறித்தும் மற்றும் பள்ளி கல்வி வளர்ச்சி பணிகள் குறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம், சென்னையில் வரும், 14ம் தேதி நடக்கிறது.
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, கடந்த 1 தேதி முதல் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடக்கின்றன.
செப்டம்பர் 15ம் தேதிக்கு பின் 1 முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகள் நடத்தலாமா என்பது குறித்து தமிழக அரசின் உயர்மட்ட குழு ஆலோசனை நடத்தியது.
1 முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகள் நடத்தலாமா என்பது குறித்து தமிழக தலைமை செயலர் இறையன்பு தலைமையில், நேற்று பல்வேறு துறை செயலர்கள் தலைமையில், ஆலோசனை நடந்தது குறிப்பிடத்தக்கது.
இத்தி தொடர்ந்து பள்ளி கல்வி ஆணையாளர் நந்தகுமார் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பதற்கான ஏற்பாடுகள் குறித்தும் மற்றும் பள்ளி கல்வி வளர்ச்சி பணிகள் குறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம், சென்னையில் செப்டம்பர் 14ம் தேதி நடக்க உள்ளதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.