மீண்டும் கொரோனா அதிகரிக்கும் நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறிதித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.தமிழகத்தில் கொரோனா 2-வது அலை உச்சம் தொட்டு தற்போது குறைந்து வருகிறது. எனினும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகளை திறக்க அரசு திட்டமிட்டுள்ள நிலையில் மீண்டும் கொரோனா அதிகரிப்பது பெற்றோர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் பள்ளிகள் திறக்கப்படுமா…??? திறக்கப்பட்டால் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவார்களா…??? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து மருத்துவ வல்லுநர்களின் கருத்துகள் அடிப்படையில் பெற்றோர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என தெரிவித்தார்.
CBSE போல் தமிழக பள்ளிகளிலும் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும். பாடத்திட்டங்களை குறைக்காமல் பொதுத்தேர்வுகளை அறிவிக்க முடியாது என்றும் கூறினார். மேலும், எவ்வளவு சதவிகித பாடங்கள் குறைக்கப்படும் என்பது ஆலோசனைக்குப் பிறகு அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.