சென்னை:
தமிழ்நாட்டில் தி மு க ஆட்சிக்கு வந்தால் மின் தடை சர்வ சாதாரணம் என அனைவரும் கூறுவதுண்டு. இந்நிலையை போக்க தமிழக அரசு கடலில் காற்றாலை மின் உற்பத்தி மையங்களை அமைக்கும் முடிவை அரசு எடுத்துள்ளது. இதற்காக டென்மார்க் நாட்டுடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் போட உள்ளது.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு ஆகியோருடன் இந்தியாவிற்கான டென்மார்க் தூதுவர் ஃபெரிடி ஸ்வான் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டை ஒட்டி இருக்கும் வங்கக்கடல் பகுதியில் மிகப்பெரிய காற்றாலை மின்சார திட்டத்தை கொண்டு வருவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் தமிழ் நாட்டின் மின்சாரத் தேவையை பெருமளவில் நிறைவேற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.