தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 9 நாள் சுற்றுப்பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் சென்ற நிலையில் வெளிநாடு பயயனத்தை முடித்துக் கொண்டு நாளை மறுநாள் தமிழகம் வருகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த 23 ஆம் தேதி 9 நாட்கள் சுற்றுப்பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்றுள்ளார். தற்போது முதலமைச்சர் ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ளார். அங்கு ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு தலைவர் இஷிகுரோ நோரிஹிகோ அவர்களையும், செயல் துணைத் தலைவர் கசுயா நகஜோ அவர்களையும் மற்றும் வர்த்தக அமைப்பினருடன் முதலமைச்சர் சந்தித்து பேசினார். இந்நிலையில், வெளிநாடு பயணத்தை முடித்துக்கொண்டு நாளை மறுநாள் தமிழகம் வரவுள்ள முதலமைச்சருக்கு சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.