பிராங்க்பர்ட்:-
போஷ் (Bosch) நிறுவனர் தலைவர் மார்க் மெய்ர் (Marc Meier) கொரோனா வைரஸை கண்டறியும் கருவி கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளார்.
போஷ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த அதிவேக மூலக்கூறு ஆய்வு (Rapid Molecular Diagnostic Device) கருவியின் மூலமாக கொரோனா வைரஸ் தொற்றை வெறும் இரண்டரை மணி நேரத்தில் கண்டறிய முடியும்.
இந்த கருவி குறித்து போஷ் நிறுவன தலைமை செயல் அதிகாரி (CEO) வோக்மர் டென்னர் (Volkmar Denner) கூறுகையில்:-
இந்தக் கருவியை வேகமாக நோய்த்தொற்றை கண்டறிவதால் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை உடனடியாக கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்த வசதியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே இந்த கருவியின் மூலம் பாக்டீரியா மற்றும் வைரஸ் நோய்களான இன்ஃப்ளூயன்சா மற்றும் நிமோனியா போன்றவை கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் கருவியை வரும் ஏப்ரல் முதல் ஜெர்மனி மற்றும் உலக அளவில் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது போஷ் நிறுவனம்.