தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தாய்லாந்து
தாய்லாந்தில் நீண்ட நாட்களாக ஓட்டப்படாமல் உள்ள டாக்சிகள் காய்கறி தோட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன என்ற செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா தொற்று காலத்தில் அரசு அறிவித்த ஊரடங்கை தொடர்ந்து தலைநகர் பாங்காக்கில் வசித்த ஏராளமான டாக்சி ஓட்டுநர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி விட்டனர். இதனால் டாக்ஸியை இயக்க முடியாது போனது.
கொரோனா தொற்று காலத்தில் டாக்சிகளை இயக்க முடியாததால் பலர் டாக்சிகளுக்கு மாத வாடகை செலுத்தா இயலாமல் போனது.
இந்நிலையில் பாங்காக்கில் ராட்சாப்ருக் என்ற டாக்சி நிறுவனத்தில் ஓட்டப்படாமல் உள்ள 300 டாக்சிகளின் கூரைகள் மற்றும் பானெட்கள் மீது டாக்சி ஓட்டுநர்கள் காய்கறி தோட்டங்கள் அமைத்தனர், டாக்சிகாய்கறி தோட்டங்களில் விளைந்த காய்கறிகளை தங்களுக்குள் பகிர்ந்து கொள்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.