சியோமி நிறுவனம் MI மற்றும் ரெட்மி பிராண்டு லேப்டாப் மாடல்களை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.ஏற்கனவே MI பிராண்டு லேப்டாப்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. எனினும், லேப்டாப் மாடல்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த சியோமி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
MI நோட்புக் 14,MI நோட்புக் 14 ஹாரிசான் எடிஷன், MI நோட்புக் 14 IC மற்றும் MI நோட்புக் 14 இ-லெர்னிங் எடிஷன் போன்ற மாடல்களை சியோமி இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.புது மாடல்கள் MI நோட்புக் 14 சீரிசின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது.
MI பிராண்டு மட்டுமின்றி ரெட்மி பிராண்டு லேப்டாப்களும் இந்தியாவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் இந்தியாவில் வெளியாகும் முதல் ரெட்மி பிராண்டு லேப்டாப் மாடல்களாக இவை இருக்கும். சீன சந்தையில் ஏற்கனவே ரெட்மி பிராண்டு லேப்டாப்கள் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.