ஜப்பானின் கோடீஸ்வரரான யுசாகு மேசாவா தனக்கு காதலியாக இருக்க இதுவரை 27,722 பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தை நடத்தி வருபவர் 44 வயதான யுசாகு மேசாவா. இவர் நிலவுக்கு மனிதனை அனுப்ப ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முடிவு செய்த போது முதல் ஆளாக விண்ணப்பித்தவர் ஆவார். மேலும் தன்னை காதலிப்பவர்களுக்கு நிலவுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.
இதனால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அவரது காதலியாக இருக்க விண்ணப்பித்துள்ளார்கள். ஜனவரி 17ம் தேதி அதற்கான கடைசி தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில் 27,722 பேர் அவரது காதலியாக இருந்து நிலவுக்கு பயணம் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதன் முடிவு மார்ச் மாத இறுதியில் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டது.
ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காக திடீரென அவர் தன் பயணத்தை ரத்து செய்துள்ளார்.
இதுகுறித்து யுசாகு மேசாவா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், விண்ணப்பித்த அத்தனை பேரையும் பார்க்கும் போது எனக்கு பரிதாபமாக உள்ளது எனவும், எனக்காக நேரம் செலவிட்டதற்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார். இதனால் பெண்கள் அனைவரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.