சுவிட்சர்லாந்தில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் குழந்தைக்கு தாக்குதலுக்கு ஆளான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தை சேர்ந்த தம்பதியினருக்கு கடந்த 2015ம் ஆண்டு குழந்தை பிறந்துள்ளது. ஆனால் அந்த சமயம் தம்பதியினர் விவாகரத்துக்கு கேட்ட வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், தாயையும் ,குழந்தையையும் குடும்பநல நீதிமன்றம் அவரை தாய் சேய் நல இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்நிலையில் குழந்தைக்கு மூன்று மாதங்கள் ஆகியிருந்த நிலையில் குழந்தையின் பெற்றோரிடையே எழுந்த தகராறு காரணமாக குழந்தை மீது கொடூர தாக்குதல் நடைபெற்றது தெரியவந்துள்ளது.
5க்கும் மேற்பட்ட முறை நடைபெற்ற இந்த தாக்குதலில் குழந்தையில் தொடை, தாடை, முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு சென்ற பிறகு தான் இந்த தாக்குதல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெற்றோர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு அவர்கள் இருவரும் குற்றத்தில் ஈடுபட்டதாகவும். அதனால் அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் பாஸல் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டுள்ளனர்.