தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சாலை விபத்தில் இறந்த இளைஞரின் உடல் உறுப்புகள் 7 பேருக்கு வாழ்வளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த 21 வயது இளைஞர் சரத்குமார் சிவகங்கையில் உள்ள வங்கியில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 11ம் தேதி பணி முடிந்து வீடு திரும்பும் போது விபத்தில் சிக்கினார்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் நான்கு நாட்கள் கழித்து அவர் மூளைச்சாவு அடைந்தார்.அதனால் அவரின் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர்.
இதனையடுத்து அவரின் உடல் உறுப்புகள் 7 நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது.இந்த சம்பவம் பரமக்குடி பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் தனது மகன் 7 பேரின் உடலில் வாழ்வதாக கூறி அவரது பெற்றோர்கள் இறுதிச் சடங்கு நடத்தவில்லை என கூறப்படுகிறது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.