லண்டனில் பேருந்து ஒன்றில் முயல் ஒன்று பயணம் செய்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
புகழ்பெற்ற லண்டன் மாநகர பேருந்துகளில் சக பயணிகளுக்கு ஆபத்து மற்றும் தொந்தரவில்லாத விலங்குகளை அழைத்து செல்லலாம் என்ற நடைமுறை வழக்கத்தில் உள்ளது.
சமீபத்தில் மாநகரப் பேருந்து ஒன்றில் முயல் ஒன்று பயணம் செய்த சம்பவம் பயணிகளிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து Suzanne Azzopardi என்ற பெண் பயணி ஒருவர் அதனை வீடியோவாக பதிவு ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
எப்படி பேருந்துக்குள் முயல் வந்தது என்று யோசித்துப் பார்க்கையில் அங்கிருந்த ஒரு நபர் தான் அதை எடுத்து வந்தார் என்பது தெரியவந்தது.
ஆனால் அவரோ எதுவும் தெரியாதது போல் ஒரு ஓரத்தில் அமர்ந்திருக்க, முயல் மற்றொரு ஓரத்தில் பொருட்கள் மீது வைக்கப்பட்டிருந்தது. எனினும் பயணிகளுக்கு தொந்தரவு கொடுப்பார்கள் அவர்கள் அதன் செய்கை ரசித்தபடி பயணம் செய்தனர்.