தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
ஆஸ்திரேலியாவில் பாம்புகள் குறித்து செய்தி சேகரிக்க சென்ற பெண் நிருபரை மலைப்பாம்பு தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தில் செயல்படும் தனியார் தொலைக்காட்சியின் பெண் நிருபர் சாரா பாம்புகள் குறித்த செய்திகளை சேகரிக்க அருகிலுள்ள பண்ணைக்கு சென்றுள்ளார்.
அங்கு விதவிதமான பாம்புகள் குறித்து தெரிந்துகொண்ட சாரா, ஒருகட்டத்தில் பார்வையாளர்களை ஈர்க்க மலைப்பாம்பு ஒன்றை தன் கழுத்தை சுற்றவிட்டு மைக்கில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மலைப்பாம்பு சாராவை தாக்க முற்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக மைக்கில் மீது பாம்பு கொத்தியதால் சாரா தப்பி பிழைத்தார்.
சாரா பயப்படும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவ இணையவாசிகள் பயங்கரமாக கிண்டல் செய்து வருகின்றனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.