தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
பாரிஸ்:
பிரான்ஸ் நகரத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவுவதால், வரும் சனிக்கிழமை அக்டோபர்-17ம் தேதி முதல் 4 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய நாடான பிரான்சிலும் தற்போது கொரோனா இரண்டாவது அலை பரவி வருகிறது.
அங்கு இதுவரை 7.79 லட்சத்துக்கும் அதிகமான பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 33 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரான், 4 வாரங்களுக்கு நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.