ஜெனிவா:-
உலகம் முழுவதும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தெருக்கள் முழுவதும் கிருமி நாசினிகள் தெளிக்கப்படுகிறது. ஆனால் வைரஸைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி தெருக்களில் மருந்து தெளிப்பதன் மூலம் கொரோனா கிருமிகளை அழிக்க முடியாது, மாறாக இது சுகாதார பிரச்சனைகளை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து WHO விடுத்துள்ள அறிக்கையில்:-
தெருக்கள் அல்லது சந்தைகளில் கிருமிநாசினி தெளிப்பதன் மூலம் கொரோனா உள்ளிட்ட பிற நோய்க்கிருமிகளை அழிப்பது நிரூபிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும் மனிதர்கள் மீதும் கிருமி நாசினியை தெளிப்பது எங்கும் பரிந்துரைக்கப்படவில்லை. இது உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் தீங்கு விளைவிக்கும் எனத் தெரிவித்துள்ளது. இதனால் மனிதர்களுக்கு கண் பாதிப்பு மற்றும் தோல் எரிச்சல், மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் இரைப்பை குடல் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பல மாதங்களாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மிகத் தாமதமாக உலக சுகாதார அமைப்பு இந்த தகவலை தற்போது வெளியிட்டுள்ளது.