பெங்களூரு:-
ஆர்வம் உள்ள இளைஞர்களை ராணுவத்தில் பங்கேற்க வைக்கும் விதமாக இந்திய ராணுவம் Tour Of Duty என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதனை நடிகை பிரணிதா சுபாஷ் பாராட்டியுள்ளார்.
பிரணிதா சுபாஷ் கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்த அளவு உணவு வழங்கும் சேவையை கவனித்து வருகிறார். பொதுவாக இந்து மதத்திலும், நாட்டுப்பற்றிலும் தீவிர எண்ணம் கொண்டவர் பிரணிதா. அவ்வகையில் இந்திய ராணுவத்தில் தயாராகும் Tour Of Duty தனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இதுவரை இல்லாத வகையில், இந்திய ராணுவத்தில் சாதாரண குடிமக்கள் சுமார் 3 ஆண்டுகளுக்குப் பணி செய்ய வாய்ப்பளிக்கும் புதிய திட்டம் தயாராகி வருகிறது. குடிமக்கள், ராணுவ அதிகாரிகளாகவும் (Officers), ஜவான்களாகவும் தளவாடத் துறைகளில் பணி செய்ய வாய்ப்பளிக்கப்படும் எனத் தெரிகிறது. இதன் முதல் கட்டமாக 100 அதிகாரிகள் மற்றும் 1000 ஜவான்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ள பிரணிதா:-
இந்திய ராணுவத்தின் இந்த புதிய திட்டம் ஒரு அருமையான நகர்வு. நம் இளைஞர்களை ராணுவத்தில் அனுமதிப்பதன் மூலம் ஒவ்வொரு முறையும் பாதுக்காப்புத்துறை பட்ஜெட்டில் 30 % விழுங்கும் பாதுகாப்பு ஓய்வூதிய சுமையை இதனால் குறைக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.