வார்விக்ஷயர்:-
இங்கிலாந்தில் கொரோனா நோயால் பலியான தாயின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட மகள் நெஞ்சுவலியால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இங்கிலாந்தின் வார்விக்ஷயர் (Warwickshire) பகுதியை சேர்ந்தவர் லாரா ரிச்சர்ட்ஸ் (32) (Laura Richards). இவரது தாயார் ஜூலி மர்ஃபி (63) (Julie Murphy) கொரோனா நோயால் உயிரிழந்தார். ஜூலி மர்ஃபி-ன் இறுதிச்சடங்கு ஏத்தர்ஸ்டோன் (Atherstone) கல்லரை பகுதியில் நடைபெற்றது.
அப்பொழுது லாரா ரிச்சர்ட்ஸ் மாரடைப்பு காரணமாக அங்கேயே சுருண்டு விழுந்து மரணம் அடைந்தார்.
இதுகுறித்து கூறிய லாராவின் சகோதரி சேடி (Sadie):-
இவர்கள் இருவரது மரணமும் எங்களது குடும்பத்தை நிலைகுலையச் செய்துள்ளது. லாரா திடீரென எங்களை விட்டுச் செல்வார் என்று நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.
லாராவின் சகோதரி சேடிக்கு சமீபத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எனவே உடல் நலன் மற்றும் சமூக விளைவுகளை கருத்தில் கொண்டு இவர் அந்த இறுதிச் சடங்கிற்கு அனுமதிக்கப்படவில்லை.
ஏற்கனவே கொரோனா நோயால் இங்கிலாந்து திண்டாடி வரும் நிலையில் கொரோனாவால் பலியான தாயின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட மகள் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.