உலகம்

29 பேரை மட்டுமே கொண்ட கிராமம்: 8 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த ஆண் குழந்தை- கொண்டாட்டத்தில் திளைத்த கிராமம்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மோர்டெரோன்:-

இத்தாலியில் வெறும் 28 பேரு மட்டுமே மக்கள்தொகையாக கொண்ட மிகச்சிறிய கிராமமான மோர்டெரோனில் எட்டு ஆண்டுகளில் முதல் குழந்தை பிறந்துள்ளது இதனை அந்த கிராமமே கொண்டாடி வருகிறது.

இத்தாலியின் லெக்கோ (Lecco) மாகாணத்தில் லொம்பார்டி (Lombardy)  பிராந்தியத்தில் உள்ள மிகச்சிறிய கிராமான மோர்டெரோனில் (Morterone) வசிக்கும் ஒரு மலை சமூக மக்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிதாக பிறந்த ஆண் குழந்தையின்  வருகையை கொண்டாடுகிறார்கள். கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு பிறந்த முதல் குழந்தை இதுவாகும். 

மோர்டெரோனில் பிறந்த இந்த ஆண் குழந்தைக்கு ‘டெனிஸ்’ (Denis) என்று பெயரிட்டுள்ளனர். இதன் மூலமாக அந்த கிராமத்தின் மக்கள் தொகை என்ற 29ஆக உயர்ந்தது.

இதுகுறித்து மோர்டெரோனின் மேயர் அன்டோனெல்லா இன்வெர்னிஸி (Antonella Invernizzi) கூறுகையில்:-

ALSO READ  ஓசோன் படலத்தில் ஒரு மில்லியன் சதுர கிலோமீட்டர் அளவிற்கு துளை....

“இது உண்மையிலேயே ஒட்டுமொத்த சமூகத்துக்கும் ஒரு கொண்டாட்டம்” என்று கூறினார்.

டெனிஸின் பெற்றோர், மேட்டியோ- சாரா தம்பதியர் இத்தாலிய பாரம்பரிய முறைப்படி குழந்தை பிறந்துள்ளது அறிவிக்கும் வகையில் நீல நிற ரிப்பன் ஒன்றினை தங்கள் வீட்டு கதவில் மாட்டினார்கள்.

பொதுவாக ஆண் குழந்தை பிறந்தால் நீல நிற ரிப்பனும், பெண் குழந்தை பிறந்தால் பிங்க் நிற ரிப்பன் உன் வீட்டு கதவுகளில் தொங்க விடுவார்கள். குழந்தை டெனிஸ், லெக்கோவில் உள்ள அலெஸாண்ட்ரோ மன்சோனி (Alessandro Manzoni) மருத்துவமனையில் 2.6 கிலோ எடையுடன் பிறந்துள்ளான்.

ALSO READ  இத்தாலி மற்றும் சீனாவை தாண்டியது அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை…

“கொரோனா வைரஸ் தொற்றின்போது கர்ப்பமாக இருப்பது எளிதானது அல்ல என்று டெனிஸின் தாய் சாரா கூறினார். ஏனெனில் நீங்கள் வெளியே செல்லவோ அல்லது அன்பானவர்களைப் பார்க்கவோ முடியாது” என்றார்.

கடைசியாக கடந்த 2012ஆம் ஆண்டு இந்த கிராமத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது குறிப்பிடத்தக்கது.

இத்தாலியில் குழந்தை பிறப்பு வீதம் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது கடந்த 2019ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இத்தாலியில் 4,20,170 குழந்தைகள் பிறந்துள்ளன. கடந்த 1861 ஆம் ஆண்டுக்குப் பிறகு குழந்தை பிறப்பு விகிதம்  குறைவாக பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பாலைவனத்தில் நிறுத்தப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான விமானங்கள்..

naveen santhakumar

ரஷ்ய நாட்டு தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி காலமானார்:

naveen santhakumar

திருடியவரிடமே பொருட்களை திருப்பி கொடுத்த திருடர்கள்… 

naveen santhakumar