உலகம்

திருடியவரிடமே பொருட்களை திருப்பி கொடுத்த திருடர்கள்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கராச்சி:-

உணவு டெலிவரி செய்யும் நபரிடமிருந்து திருடப்பட்ட விலையுயர்ந்த பொருட்களை திருடியவர்களே திருப்பித் தந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் கராச்சியில் கொள்ளையர்கள் இருவர் உணவு டெலிவரி செய்யும் நபரிடம் இருந்து திருடப்பட்ட விலையுயர்ந்த பொருட்களை திருப்பி கொடுத்தனர். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. 

ALSO READ  இந்த மாதிரி எந்த மாமியாரும் மருமகனுக்கு பரிசு கொடுத்திருக்க மாட்டாங்க…..அப்புடி என்ன பரிசு????
courtesy.

அந்த CCTV காட்சியில், கொள்ளையர்கள் டெலிவரி செய்யும் நபரிடம் இருந்து திருடி சென்ற பொருட்களை மீண்டும் அவரிடம் திருப்பிக் கொடுத்தனர். அப்போது, பொருட்களை பறிகொடுத்த இளைஞர் அழுதார்.  இதை கண்ட கொள்ளையர்களில் ஒருவர் டெலிவரி பையனை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார். மேலும் செல்வதற்கு முன்பு, டெலிவரி செய்யும் நபரின் கைகளை குலுக்கிவிட்டு சென்றுள்ளார்.

திருடர்கள் இருவர் டெலிவரி செய்யும் நபரிடம் திருடி சென்ற பொருட்களை மீண்டும் அவரிடம் கொடுத்துவிட்டு அவரை கட்டிப்பிடித்து, ஆறுதல் கூறிய சம்பவம் ஆச்சரியத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கீரிப் பிள்ளைகளின் பாசப்போராட்டம்… 

naveen santhakumar

47 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த காதல் மோதிரம் …

Admin

ரூ.1.5 கோடி மதிப்பு கொண்ட பாம்பு விஷம் பறிமுதல்

Admin