தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
வாஷிங்டன் :
2024-ம் ஆண்டில் நிலவிற்கு பெண் உள்பட 2 விண்வெளி வீரர்களை அனுப்புவதற்கு நாசா திட்டமிட்டுள்ளது.
இது குறித்து நாசாவின்(NASA) நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டைன் பேட்டியளித்தார்.அதில், “நிலவுக்கு மனிதர்களை அழைத்து செல்ல லேண்டரை உருவாக்க 3 வகையான திட்டங்கள் உள்ளன. இதற்கு 28 பில்லியன் டாலர் வரைக்கும் தொகை செலவாகலாம்.
இதற்கு,முதல் தவணையாக 3.2 பில்லியன் டாலருக்கு அரசு ஒப்புதல் அளிக்கின்ற பட்சத்தில் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குவதற்கான நடவடிக்கைக்கு தயாராக இருக்கிறோம்.இதையடுத்து 2024-ல் நிலவுக்கு பெண் உள்ளிட்ட 2 விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.