கோலாலம்பூர்:-
மஹாதிர் முகம்மது மீண்டும் மலேஷிய பிரதமர் ஆவார் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் புதிய பிரதமராக முஹ்யித்தீன் யாசினை (Muhyiddin Yassin) அந்தநாட்டு அரசர் நியமித்துள்ளார்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/02/IMG-20200229-WA0083-1024x576.jpg)
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/02/IMG-20200229-WA0087.jpg)
முஹ்யித்தீன் யாசின், மஹாதிர் முகம்மதுவின் பெர்சாட்டு கட்சியின் (Bersatu Party) தலைவராக தற்போது உள்ளார்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/02/IMG-20200229-WA0089.jpg)
மலேஷிய தேசிய கூட்டணி-ல் (2018 தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணி) ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து கடந்த திங்களன்று பிரதமர் பதவியை மஹாதிர் முகம்மது ராஜினாமா செய்தார்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/02/IMG-20200229-WA0085.jpg)
இவரின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த முஹ்யித்தீன் யாசின் (72) நாளை (ஞாயிற்று கிழமை) பிரதமராக பதவி ஏற்பார் என கோலாலம்பூர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தனது நீண்ட கால அரசியல் எதிரியான அன்வர் இப்ராகஹிமுடன் சேர்ந்து மீண்டும் பிரதமர் பதவியை பிடிக்க மஹாதிர் முகம்மது முயற்சித்தார்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/02/IMG-20200229-WA0088.jpg)
ஆனால் பெரும்பாலான கூட்டணி கட்சிகள் முஹ்யித்தீன் யாசினுக்கு மட்டுமே தங்களது ஆதரவை தெரிவித்ததை அடுத்து அவருக்கு பிரதமர் பதவி கிடைத்துள்ளது.
முஹ்யித்தீன் யாசின் இதற்கு முன்னர் நஜீப் ரஸாக் தலைமையிலான அரசில் துணை பிரதமாராக இருந்தார். இந்த நஜீப் ரஸாக் 2018-ம் ஆண்டு தேர்தலில் மஹாதீரிடம் தோல்வியுற்றது குறிப்பிடதக்கது.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/02/IMG-20200229-WA0086.jpg)