தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
ஐரோப்பாவில் இத்தாலிக்கு அடுத்தபடியாக அதிகளவு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடாக ஸ்பெயின் திகழ்கிறது. இந்நிலையில் ஸ்பெயின் நாட்டின் துணை பிரதமருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
ஸ்பெயின் நாட்டின் துணை பிரதமராக கார்மென் கேல்வோ (Carmen Calvo) உள்ளார். முன்னர் இவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று முடிவுகள் வந்தது.
ஆனால் தற்போது செய்யப்பட்ட பரிசோதனையில் இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் 48,000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். 3,400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போது உலக அளவில் இத்தாலிக்கு அடுத்தபடியாக அதிகளவு பாதிக்கப்பட்ட தேசமாக ஸ்பெயின் திகழ்கிறது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.