தென்னாப்பிரிக்கா அணியுடனான 2வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 2 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2வது போட்டி டர்பன் நகரில் நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டிற்கு 204 ரன்கள் குவித்தது. பந்துவீச்சில் தென்னாப்பிரிக்காவின் லுங்கி நிகிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத்தொடர்ந்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியில் கேப்டன் குயின் டி காக் (65 ரன்கள்) அதிரடியாக விளையாடியும் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இங்கிலாந்து அணியில் டாம் கரண், ஜோர்டான், மார்க் வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன்மூலம் 2 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்றது. முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையில் உள்ளன. 3வது போட்டி பிப்ரவரி 16ம் தேதி செஞ்சூரியனில் நடைபெறுகிறது.