கருப்பையில் புழுக்கள்:-
கருப்பையில் புழுக்கள் இருந்தால்
மிளகு, வெள்ளைப்புண்டு, வெள்ளைக்குன்றிமணி வேர், கண்டங்கத்திரி வேர், வெள்ளைச்சாரணை வோ் 5 கிராம் அளவு எடுத்து துளசிச்சாறு விட்டு நன்கு அரைத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து விலக்கான மூன்றாம் நாள் காலை மட்டும் உட்கொண்டால் கர்ப்பம் தரிக்கும்.
புங்கன் வேரை எலுமிச்சை அளவுக்கு நன்கு அரைத்து விலக்கான மூன்று நாள் சாப்பிட்டு வந்தால் மலட்டுக்கிருமிகள் செத்துவிடும்.
விழுதி வேர் 2 பலம் அளவு இடித்து அதை 1 படி தண்ணீரில் போட்டு அரைக்கால்படியாக காய்ச்சி வடிகட்டி விலக்கான நாட்களில் கொடுக்க மலட்டுப்புச்சிகள் சாகும்.
கருப்பையில் தசை வளர்ந்தால்:-
உறவுக்கு பின் அடி வயிறு குத்தல் அல்லது வலி இருந்தால் கருப்பையில் தசை வளர்ந்துள்ளது என்று பொருள்.
அதற்கு மிளகு, சீரகம் இரண்டையும் கடுகெண்ணெய் விட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.
இதை, விலக்கான நாட்களில் சாப்பிட்டு விட்டு விலக்கு முடிந்தபின் தண்டில் தடவி புணரந்தால் வலி இருக்காது, கருவும் தரிக்கும்.
கருப்பையில் ஜவ்வு தடித்திருந்தால்:-
உறவுக்கு பின் உடல் நடுங்கி மயக்கம் வந்தால் கருப்பை ஜவ்வு தடித்திருக்கிறது என பொருள்.
பெருங்காயத்துடன் நல்லெண்ணெய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
இதை விலக்கான நாட்களில் சாப்பிட்டு, பின் அதை தண்டில் புசி புணரந்தில் குழந்தை உண்டாகும்.
வாயு நீங்க
உறவுக்கு பின் குளிரும், சுரமும் இருந்தால் வாயு கோளாறு என்று பொருள்.
இதற்கு கோழிப்பித்து, திப்பிலி, கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை எடுத்து சுத்தம் செய்து சேர்த்து அரைத்துக்கொண்டு அதை தண்டில் புசி புணரவும். உடல் குளிராது, குழந்தை தரிக்கும்.
வேறு சில மருத்துவ குறிப்புகளும் உள்ளன.
கல்யாண முருங்கைப்பூ, மிளகு இரண்டையும் சேர்த்தரைத்து அதை புளியங்கொட்டை அளவு எடுத்து, காலை மாலை என இருவேளை தொடர்ந்து 5 நாட்கள் சாப்பிட்டு வரவும்.
பிறகு 5 நாள் இடைவெளி விட்டு மீண்டும் 5 நாள் சாப்பிட கருப்பை கோளாறுகள் நீங்கி கரு நிற்கும்.
அசோகுப்பட்டை, மாதுளை வேர்ப்பட்டை, மாதுளம் பழ ஓடு மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்துக் கொள்ளவும்.
இதை 3 சிட்டிகை காலை மாலை என இருவேளைகள் வெந்நீரில் கலந்து 3-4 மாதம் கொடுத்து வந்தால் மலடு பிரச்சனை தீரும்.
இலந்தையிலை 1 பிடி, மிளகு 6, புண்டுபல் 4 மூன்றையும் அரைத்து விலக்கான 3 நாள் கொடுத்து வர கருப்பை குறைகள் நீங்கி குழந்தை உண்டாகும்.
மாதுளை வேர்ப்பட்டை, மரப்பட்டை, விதை சமன் அளவு எடுத்து அதை சுரணம் செய்து 3 கிராம் அளவு காலை மாலை இருவேளை வெந்நீரில் கலந்து கொடுத்தால் கர்ப்பம் தரிக்கும்.
சித்தாமணக்கெண்ணையில் மஞ்சனத்தி இலைசாற்றை கலந்து கொடுத்தால் கரு தங்கும்.
அரை வராகன் எடை அளவு வால்மிளகு, 1 வராகன் எடை கற்கண்டு இரண்டையும் சேர்த்தரைத்து 7நாட்கள் கொடுத்தால் பிரச்சனை தீரும்.
பொன்னாவரை விதையை பசும்பாலில் போட்டு காய்ச்சி 8 நாட்கள் குடித்து வந்தால் கர்ப்பம் தரிக்கும்.
மிளகு, புண்டு, ஆண்வசம்பு , வேப்பங்கொழுந்து இந்த நான்கையும் அரைத்து விலக்கான மூன்று நாளும் மூன்று மாதங்களுக்கு இதை கொடுத்து வந்தால் குழந்தை பேறு கிட்டும்.
சீரகம், கடுக்காய் சமன் அளவு எடுத்துக் கொள்ளவும். இதை நன்கு சேர்த்து அரைத்து தண்டில் புசி புணரந்தால் குழந்தை உண்டாக வாய்ப்பு உண்டு.