தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை,
சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ‘லைகா’ புரோடைக்ஷன் சுபாஷ்கரன் தாயரிக்கிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன் EVP ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற்ற போது கிரேன் விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது.
இதில், துணை இயக்குநர் கிருஷ்ணா உட்பட 3 பேர் பலியாகினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் லைகா நிறுவனர் சுபாஷ்கரனுக்கு கமல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் :-
படப்பிடிப்பு தளத்தில் உள்ள அனைவரது பாதுகாப்பு மற்றும் உயிர் காப்பீட்டை உறுதி செய்த பின்னரே தான் உட்பட அனைவரும் இந்தியன்-2 படப்பிடிப்பில் கலந்து கொள்ளப் போவதாக லைக்கா நிறுவனத்திற்கு எழுதிய கடிதத்தில் கமலஹாசன் இவ்வாறு கூறி உள்ளார்.
இதனால் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.