‘ஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர்கள் சீனாவை விட்டு வெளியேற உத்தரவு.
அமெரிக்காவை சைர்ந்த வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (Wall Street Journel) எனும் பத்திரிக்கையின் இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்ட அந்த கட்டுரையில், கொரானா நோய் தாக்குதல் தொடர்பாக விஷயத்தில் சீனா சரிவர செயல்படவில்லை என விமர்சிக்கப்பட்டிருந்தது.
இதனால் ஆத்திரமடைந்த சீன அரசு அமெரிக்காவை சேர்ந்த இரு செய்தியாளர்கள் Josh Chin மற்றும் Chao Deng, ஆஸ்திரேலியாவை Philip Wen என்ற மற்றொரு செய்தியாளரொயும் நாட்டை விட்டு 5 நாட்களுக்குள் வெளியேற உத்தரவிட்டது.
இதற்கு, முன்னர் இந்த மூவரும் சீனாவின் ஸிங்ஜியாங்க் (Xinjiang) வதை முகாம்களில் லட்ச கணக்கான இஸ்லாமியர்கள் அடைக்கப்பட்டது குறித்து எழுதி சர்ச்சைக்குள்ளானவர்கள்.
சீனாவின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, அங்குள்ள சீன பத்திரிகைகளுக்கும் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.