நியூயார்க்:-
இ-சிகரெட் எனப்படும் எலக்ட்ரானிக் சிகரெட்டை பயன்படுத்துவார்கள் எளிதில் கொரோனா தாக்குதலுக்கு ஆளாக கூடும் என அமெரிக்க சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
சில தினங்களுக்கு முன் பேசிய நியூயார்க் நகர மேயர் பில் ட’ பிளாசியோ (Bill De’ Blasino):-
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலும் வயதானவர்கள் தான். ஆனால் இவர்களில் 22 வயதான நல்ல ஆரோக்கியம் உள்ள இளைஞரும் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இவருக்கு இந்த தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்று தெரியவில்லை.
அதனால் இவர் ஒரு இ-சிகரெட் உபயோகிப்பாளர் (Vaper) என்று மட்டும் தெரிகிறது. எனவே சிகரெட் பிடிப்பவர்கள் எளிதில் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்று எச்சரித்திருந்தார்.
இதனிடையே, Johns Hopkins Bloomberg School of Public Health-ஐ சேர்ந்த Dr. Joanna Cohen மேயர் பில் கூறியதை ஒப்புக்கொண்டுள்ளார்.
பொதுவாக சிகரெட் பிடிப்பவர்களுக்கு நுரையீரல் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும் இதனால் இவர்களின் உடல் எளிதில் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகும். இவர்களால் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராட இயலாது.
எனவே சிகரெட் மற்றும் இ-சிகரெட் இரண்டையும் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்
U.S. Centers for Disease Control and Prevention கூறுகையில்:-
பெரும்பாலான நுரையீரல் பாதிக்கப்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள், இதய சம்பந்தமான நோய்கள் உடையவர்கள் கொரோனா நோய் தாக்குதலுக்கு எளிதில் ஆளாகிறார்கள் எனக்கூறி உள்ளது