நேற்றைய தினம் நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் மோடியின் சுய ஊரடங்கு உத்தரவிற்கு ஆதரவு தெரிவித்து கோரோனா தொடர்பான விழிப்புணர்வு வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
ஆனால் இந்த வீடியோவை ட்விட்டர் நிறுவனம் அதிரடியாக நீக்கியது. ஏனெனில் இந்த வீடியோவில் 14 மணி நேரத்திற்குமேல் கொரோனா வைரஸ் பரவாது என்று ரஜினி தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக இதுவரை எந்த ஆய்வுகளும் நிரூபிக்கப்படாத நிலையில் குறித்து தவறான தகவல்கள் எதுவும் பரவக் கூடாது என்ற நோக்கத்தில் ட்விட்டர் நிறுவனம் இந்த வீடியோவை நீக்கியதாக தெரிவித்தது.
இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் இந்த வீடியோவை யூ-ட்யூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்து அதை மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்.
இன்று ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பதிவில்
நேற்று நான் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது எனவும், அந்த காணொளியில் 12 முதல் 14 மணி நேரம் வரை மக்கள் வெளியில் செல்லாமல் இருந்தால் இந்த வைரஸ் பரவுவது தடுக்கப்படும் என்று கூறி இருந்ததாக விளக்கமளித்தார்.
இந்நிலையில் ட்விட்டர் இந்தியா நிறுவனம் வைரஸ் குறித்த துல்லியமான தகவல்களை பரப்புவது எங்களுடன் இணைந்ததற்கு நன்றி தலைவா என்று பதிவிட்டுள்ளது.