தமிழகம்

திருச்சியில் மருத்துவர்கள் மீது எச்சில் துப்பிய கொரோனா நோயாளி… புகாரின் அடிப்படையில் கொலை முயற்சி வழக்கு பதிவு…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருச்சி:-

திருச்சியில் மருத்துவர்கள் மீது எச்சில் துப்பிய கொரோனா நோயாளி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி அரசு மருத்துவமனையில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 39 பேர் பிற மாவட்டங்களைச் சேர்ந்த 3 பேர் என மொத்தம் 42 பேர் கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள்.

ALSO READ  மதன் OPன் மனைவி கிருத்திகா கைது…!

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் வீட்டில் இருந்து மனைவி கொண்டு வந்த பிரியாணியை சாப்பிட அனுமதி மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த நபர் ரகளையில் ஈடுப்பட்டார். அதோடு சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்து, மருத்துவர்கள் மீது எச்சில் துப்பியும், முகக் கவசங்கள் தூக்கி எறிந்தும்  ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து இவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா நோய் பரவாமல் இருக்க தும்மும் போதும் இருமும் போதும் அருகே இருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என அறிவுருத்தப்பட்டிருக்கும் நிலையில் கொரோனா நோயாளி ஒருவர் மருத்துவர்கள் மீதே எச்சில் துப்பிய சம்பவம் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… ஆட்சியர் பிறப்பித்த திடீர் உத்தரவு!

naveen santhakumar

சிலைகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

naveen santhakumar

உணவுத்துறை அமைச்சர் காமராஜிற்கு கொரோனா :

naveen santhakumar