கொரோனா வைரஸை பரப்பியதற்காக, சீனா 130பில்லியன் பவுண்ட் இழப்பீடு வழங்க வேண்டும் என ஜெர்மனி தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை தொடர்ந்து,ஜெர்மனியும் தற்போது சீனா மீது குற்றம் சாட்டி உள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் தங்களுக்கு பொருளாதார ரீதியாக ஏற்பட்ட இழப்புக்கு சீனா எவ்வளவு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற விவரப்பட்டியலையும் ஜெர்மனி வெளியிட்டுள்ளது.
சுற்றுலா, திரைப்படத்துறை, சிறு குறு தொழில் ஆகியவற்றில் ஏற்பட்ட பாதிப்புக்காக 130 பில்லியன் பவுண்ட் (149 பில்லியன் யூரோக்கள்) இழப்பீடாக சீனா தர வேண்டும் என ஜெர்மனி தெரிவித்துள்ளது.
அந்த பட்டியலில் சுற்றுலா இழப்புக்காக 27 பில்லியன் யூரோக்களும், திரைப்படத்துறையில் ஏற்பட்ட இழப்புக்காக 7.2 பில்லியன் யூரோக்களும், விமான சேவையில் ஏற்பட்ட இழப்புக்காக 1 பில்லியன் யூரோக்களும், சிறு தொழில்களில் ஏற்பட்டுள்ள இழப்புக்காக 50 பில்லியன் யூரோக்களும், சீனா தங்களுக்கு வழங்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள சீனா, தங்கள் நாட்டின் மீதான வெறுப்பு காரணமாக ஜெர்மனி இவ்வாறு கூறியிருப்பதாக தெரிவித்துள்ளது. உலகம் முழுவதையும் பாதிக்கும் ஒரு தொற்றுநோய்க்கு, ஒரு நாட்டைக் குறை கூறி இழப்பீடு கேட்பது அயல்நாட்டு வெறுப்பையும் (Xenophobia), தேசியவாதத்தையும் (Nationalism) தூண்டும் மோசமான செயல் என சீனா விமர்சித்துள்ளது.
ஜெர்மனியின் பொருளாதாரம் 4.2 சதவீதம் அளவிற்கு வீழ்ந்துள்ளதன் மூலமாக தனி நபர் ஒருவருக்கு 1784 யூரோக்கள் 1550 (பவுண்டுகள்) நஷ்டம் ஏற்பட்டுள்ளது.