சினிமா

குடியுரிமை சட்டத்திருத்தம் குறித்து நச்சென போட்டோ பதிவிட்ட அமலா பால்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து, இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ள இந்து, சீக்கியர் உள்ளிட்டோருக்கு குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை, அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்தது.

இந்த மசோதாவிற்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு தரப்புகளில் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதே சமயம், இதை எதிர்த்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் இந்த குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக போராடி வருகின்றனர்.இது குறித்து பலரும் தங்களின் கருத்தை தெரிவித்து வரும் நிலையில், நடிகை அமலா பால் குடியுரிமை சட்டத்திருத்தம் குறித்து ஒரு போட்டோ பதிவிட்டுள்ளார்.

அந்த போட்டோவில் ஒரு பெண் தனது கையில் ஒரு பதாகையை வைத்துள்ளார்.அதில் இந்தியன் என்ற ஒரு வார்த்தைக்குள் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர், ஜெயினவர், புத்திஸ்ட் , சீக்கியர்கள் அனைவரும் அடக்கம் என்பதை உணர்த்தும் வகையில் உள்ளது.அமலா பாலின் இந்த பதிவிக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.


Share
ALSO READ  பிக்பாஸ் குறித்து பளிச்சென்று கூறிய முன்னாள் போட்டியாளர்:
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சீயான் 60 படத்தில் இணைந்த பேட்ட பட நடிகர் !

News Editor

இவரா தனுஷின் அடுத்த பட ஜோடி… வியக்கும் கோலிவுட்

Admin

சிகரெட், சரக்கு பாட்டில், தமிழ் ராக்கர்ஸ் … வைரலாகும் பிரேம்ஜியின் புகைப்படம்…!

naveen santhakumar