உலகம்

புலியை பிடிக்கச் சென்ற போலீசாருக்கு காத்திருந்த ஆச்சரியம்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இங்கிலாந்தில் உள்ள ஒரு  கிராமத்தில் புலி ஒன்று சுற்றித் திரிவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக புலியை பிடிக்க காவல்துறையினர் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் ஹெலிகாப்டர் மூலம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு சென்ற காவல்துறைக்கு ஆச்சரியம் ஒன்று காத்திருந்தது.  

இங்கிலாந்தில் கென்ட் (Kent) அருகே செவன்ஓக்ஸ் (Sevenoaks) பகுதியிலுள்ள இக்தம் (Ightham) கிராமத்தில் புலி ஒன்று சுற்றித் திரிவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது இதையடுத்து பத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஆயுதங்களுடன் புலியை பிடிக்க கிளம்பினார்கள்.

புலியை கண்ட காவல்துறையினர் அதனை பிடிக்க அருகில் சென்ற போது அது கோழி வலை மற்றும் பிசினிலிருந்து தயாரிக்கப்பட்ட புலி சிற்பம் என்று தெரியவந்தது. மேலும் அந்த புலி சிற்பம் 20 ஆண்டுகளாக  கிராமத்தின் அடையாளமாக இருந்து வந்துள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

ALSO READ  இங்கிலாந்து சுகாதார துறை அமைச்சருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு.....

இந்த சிற்பத்தை 85 வயதான ஜூலியட் சிம்ஸன் (Juliet Simpson) என்ற மூதாட்டி வடிவமைத்துள்ளார்.  தகவல் தெரிந்ததும் உடனடியாக பிரிந்து சென்ற மூதாட்டி போலீசாரிடம் இது குறித்து விளக்கியுள்ளார்.

Juliet Simpson

புலியை பிடிக்க போரோம் என்று  ஆயுதங்களுடன் ஹெலிகாப்டரில் சென்ற போலீசாருக்கு இந்த சம்பவம் கடைசியில் நகைச்சுவையாக முடிந்துள்ளது.

ALSO READ  வட கொரிய அதிபர் கிம் உடல்நிலை கவலைக்கிடம்... வடகொரியாவின் ரிசார்ட் ஒன்றில் நிறுத்தப்பட்டுள்ள கிம்மின் ரயில்...


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமெரிக்காவில் காலிஸ்தான் கொடியை காந்தி சிலை மீது போர்த்தி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு:

naveen santhakumar

பருவநிலை மாறுபாடால் தண்ணீர் தொடர்பான பேரிடர்களான பெருவெள்ளம், பஞ்சம், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் : ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை

News Editor

2070-க்குள் மூன்றில் ஒரு பங்கு உயிரினங்கள் அழியும்…ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Admin