இங்கிலாந்தில் உள்ள ஒரு கிராமத்தில் புலி ஒன்று சுற்றித் திரிவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக புலியை பிடிக்க காவல்துறையினர் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் ஹெலிகாப்டர் மூலம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு சென்ற காவல்துறைக்கு ஆச்சரியம் ஒன்று காத்திருந்தது.
இங்கிலாந்தில் கென்ட் (Kent) அருகே செவன்ஓக்ஸ் (Sevenoaks) பகுதியிலுள்ள இக்தம் (Ightham) கிராமத்தில் புலி ஒன்று சுற்றித் திரிவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது இதையடுத்து பத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஆயுதங்களுடன் புலியை பிடிக்க கிளம்பினார்கள்.
புலியை கண்ட காவல்துறையினர் அதனை பிடிக்க அருகில் சென்ற போது அது கோழி வலை மற்றும் பிசினிலிருந்து தயாரிக்கப்பட்ட புலி சிற்பம் என்று தெரியவந்தது. மேலும் அந்த புலி சிற்பம் 20 ஆண்டுகளாக கிராமத்தின் அடையாளமாக இருந்து வந்துள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சிற்பத்தை 85 வயதான ஜூலியட் சிம்ஸன் (Juliet Simpson) என்ற மூதாட்டி வடிவமைத்துள்ளார். தகவல் தெரிந்ததும் உடனடியாக பிரிந்து சென்ற மூதாட்டி போலீசாரிடம் இது குறித்து விளக்கியுள்ளார்.
புலியை பிடிக்க போரோம் என்று ஆயுதங்களுடன் ஹெலிகாப்டரில் சென்ற போலீசாருக்கு இந்த சம்பவம் கடைசியில் நகைச்சுவையாக முடிந்துள்ளது.