உலகம்

உலகின் பாதுகாப்பான நாடு என்று கருதப்படும் நாட்டில் 17 வயது இளம்பெண் தலை துண்டிக்கப்பட்டு கொலை. 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உடெவல்லா(Uddevalla):-

ஸ்வீடனில் ஓஸ்லோ (Oslo)- கோதன்பெர்க் (Gothenburg)  இடையே அமைந்துள்ள உடெவல்லா நகரில் 17 வயது இளம் பெண்ணை அவரது முன்னாள் காதலன் தலையை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வில்மா ஆண்டர்சன் (17) (Wilma Anderson) என்ற இளம் பெண்ணும் டிஸ்கோ அஹமத் ஷாபாஸ் (23) (Tishko Ahmed Shabaz) இளைஞனும் காதலித்து வந்தனர் பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

இந்நிலையில் டிஸ்கோ வீட்டிலிருந்து தனது உடைமைகளை எடுக்க வில்மா அங்கு கடந்த நவம்பர் 14ம் தேதி  சென்றதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் மாயமானார். 

இதுயடுத்து வில்மாவின் தாய் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார்  வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். கிட்டத்தட்ட 5000 நிபுணர்கள் போலீஸ் அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து ஸ்வீடனில் மிகப்பெரிய தேடுதல் வேட்டையை நடத்தி வந்தனர். ஆனால் எந்தவித தகவலும் தெரியாமல் இருந்து வந்தது.

ALSO READ  கொரோனா பரவல்: சீனாவிற்கு எதிராக விசாரணை- இந்தியா ஆதரவு..

இந்நிலையில் ஒரு இடத்தில் வில்மாவின் தலைப் பகுதி மட்டும் தனியாக கண்டெடுக்கப்பட்டது. ஆனால் அவரது உடல் கண்டெடுக்கப் படவில்லை.

இதை தொடர்ந்து போலீசார் அந்த கொலை வழக்கு சம்பந்தமாக அப்பெண்ணின் முன்னாள் காதலன் டிஷ்கோவை தேடி அவரது வீட்டுக்கு சென்றபோது  வீட்டின் தரையில் ரத்தம் இருப்பதைக் கண்டு கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில்:- 

வில்மா விற்கும் அவரது முன்னாள் காதலர் இருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக வில்மாவின் தலையை வெட்டி எடுத்து அதை அலுமினியம் ஃபாயில் (Aluminium Foil)-ல் டேப் ஒட்டி ஒரு சூட்கேசில் மூடி வைத்து தனது வீட்டிலேயே மறைத்து வைத்திருக்கிறான். பின்னர் அந்த தலையை வெளியே தூக்கிப் போட்டுள்ளான். அவளின் மீதி உடல் பாகங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

ALSO READ  கொரோனா தொற்றை தடுக்க இன்ஹேலர் அல்லது மாத்திரை - தீவிர ஆய்வில் ஸ்வீடன் விஞ்ஞானிகள்

இந்த கொடூரக்கொலை ஸ்வீடனில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஏனெனில் உலகின் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக ஸ்வீடன் கருதப்படுகிறது.

சம்பவத்தன்று ஒரு பெண் கதறி அழும் குரல் கேட்டதாக அருகில் வசிப்பவர்கள் கூறியுள்ளனர்.

டிஸ்கோ ஈரானில் பிறந்தவன் கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்வீடன் குடிமகனாக மாறியுள்ளார். வழக்கம் போல இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் டிஸ்கோ மருத்துவம் தான் அவர் கூறுகையில் அந்தப் பெண் என்னுடைய காதலி நான் அவனை அதிகமாக நேசித்த நான் எவ்வாறு அவளை கொலை செய்வேன் என்று கூறி வருகிறான்.

ஆனால் டிஷ்கோ கோவின் வீட்டில் பில் மாவின் கோர்ட் மற்றும் அண்ட் பேக் ஆகியவை கைப்பற்றப்பட்டது இந்த வழக்கு வரும் மே 26-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமெரிக்காவில் வரிசையாக ஏற்பட்ட நிலநடுக்கம்….மக்கள் அதிர்ச்சி….!!!

Shobika

போலி கையில் தடுப்பூசி – வசமாக சிக்கிய சுகாதார ஊழியர்

naveen santhakumar

சொகுசு படகில் கொரோனா சிகிச்சை …. மக்களை காக்க போராடும் நாடு…

naveen santhakumar