நியூயார்க்:-
கொரோனா (Covid-19) தொற்று பரவியது தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சீனா மீது குற்றம்சாட்டி வரும் நிலையில், அதுதொடர்பாக விசாரணை நடத்த உலக சுகாதார நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கு இந்தியா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் இந்த கொம்பு கூட கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனா தான் காரணம் என்று அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. மேலும் சில நாடுகளும் சீனாவிற்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டுள்ளன.
மேலும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உலக சுகாதார நிறுவனம் சீனாவின் கைப்பாவையாக செயல்படுகிறது என்றும் அதன் தலைவர் டெட்ரோஸ் சீனாவுடன் சேர்ந்து உண்மையை மூடி மறைப்பதாக தொடர்ந்து கூறி வந்தார்.
இந்நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தொடர் அழுத்தம் காரணமாக கொரோனா பரவல் தொடர்பாக சீனா மீது விசாரணைக்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த விசாரணைக்கு கொரோனா தொற்று பிரச்சனை முடிவுக்கு வரும் நிலையில் முழுஒத்துழைப்பு தர தயார் என சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். வளரும் நாடுகள் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர அடுத்த 2 ஆண்டுகளுக்கு எடுக்கும் நடவடிக்கைக்கு சீனா 2 பில்லியன் அமெரிக்க டாலர் பண உதவி செய்யும் என்றும் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
இதனிடையே உலக சுகாதார சபையின் (World Health Assembly) நிர்வாக குழு தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.