இந்தியா சினிமா

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேனேஜர் தற்கொலை… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மும்பை:-

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே நான்கு நாட்களுக்கு முன்னர் ஜூன் எட்டாம் தேதி சுஷாந்த் சிங் ராஜ்புத் முன்னாள் மேனேஜர் திஷா சலியன் (Disha Salian) தற்கொலை செய்து கொண்டார்.

மும்பையில் மலாடு (Malad) பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த திஷா கடந்த எட்டாம் தேதி 14வது மாடியில் இருந்து  கீழே குதித்தார். அவரை உடனடியாக மீட்டு போரிவாளியில் (Borivali) உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று தெரிவித்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதுதொடர்பாக திஷாவின் பெற்றோரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.  அவர் தற்கொலை செய்து கொண்டபோது அவரைத் திருமணம் செய்ய இருந்த (Fiance ) ரோஹன் ராய் உடன் இருந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். 

ALSO READ  புகழ் பெற்ற நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் தற்கொலை…
Right Rohan Rai.

அவரது தற்கொலைக்கான காரணம் இதுவரை தெளிவாக தெரியவில்லை. எனினும் திஷா தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், அவர் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி இருந்தினார் என்றும் அதனால் மது மயக்கத்தில் (Tipsy) ஜன்னலில் இருந்து தவறி விழுந்தார் என்று போலீஸ் விசாரணை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ALSO READ  மாரி செல்வராஜ், பா ரஞ்சித் மற்றும் த்ருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகும் படத்தின் அறிவிப்பு வெளியாகியது 

அவர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இதைத்தவிர்த்து தியா சக்கரவர்த்தி, வருண் ஷர்மா, பாரதி சிங் ஆகிய நடிகர்களுக்கும் திஷா மேலாளராக இருந்துள்ளார். இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தும் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கோழிக்கோடு விமான விபத்து: பிறக்கப்போகும் குழந்தையை பார்க்காமலேயே இறந்த துணை பைலட்… 

naveen santhakumar

சரண்யா பொன்வண்ணன் மகள் திருமணம்: வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்

naveen santhakumar

கொரோனா வைரஸ் அச்சத்தால் ரயில்களில் A/C பெட்டிகளில் பயணிகளுக்கு போர்வை வழங்குவது நிறுத்தம்- ரயில்வே உத்தரவு….

naveen santhakumar