தமிழகம்

நில அளவீட்டு கட்டணத்தை 40 மடங்கு உயர்வு: தமிழக அரசு அரசாணை வெளியீடு!… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

தமிழகத்தில் நில அளவீட்டு கட்டணத்தை 40 மடங்கு உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

நில அளவை மற்றும் நிலவரித் திட்டம் தொடர்பான அரசாணையை தமிழக அரசின் வருவாய்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, நன்செய் நிலத்தின் எல்லை நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் 50 ரூபாயில் இருந்து 2000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

தமிழக வருவாய்த் துறைச் செயலர் அதுல்ய மிஸ்ரா பிறப்பித்துள்ள உத்தரவில்:-

கிராம, வட்ட, மாவட்ட வரைபடங்கள் வழங்குவதற்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. புல அளவீட்டு புத்தகம் பிரதி (A4) 20 ரூபாயிலிருந்து 50 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புல அளவீட்டு புத்தகம் பிரதி (A3)100 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

ALSO READ  கொரோனா அச்சுறுத்தலால் தமிழகத்தில் டாஸ்மாக் பார்களை மூட உத்தரவு...

புல எல்லைகளை சுட்டிக்காட்டும் கட்டணம் 20 ரூபாயிலிருந்து 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்லது. கோணமானி மூலம் பக்க எல்லைகளை சுட்டிக்காட்ட 30 ரூபாயிலிருந்து 300 ரூபாய் கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு நில அளவரின் முடிவுக்கு எதிரான மேல்முறையீட்டிற்கு கட்டணம் 50 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. புல எல்லைகளை நிர்ணயித்து சுட்டிக்காட்ட புன்செய் நிலத்திற்கு 30 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாகவும் நன்செய் நிலத்திற்கு 50 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

ALSO READ  பிரான்ஸ் அதிபர் இமானுவேலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் அவரது புகைப்படத்தை ஒட்டியதால் பரபரப்பு:

மேல் முறையீட்டின் பேரில் மறு அளவீட்டு புன்செய் நிலத்திற்கு 60 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாகவும், நன்செய் நிலத்திற்கு 60 ரூபாயில் இருந்து 4,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாவட்ட வரைபடத்திற்கான கட்டணம் 189 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மாவட்டத்திற்கான எல்லைக்கோடு வரைபட கட்டணம் 51 லிருந்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. வட்ட வரைபடத்திற்கான (வண்ணம்) கட்டணம் 357 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

நில அளவை தொடர்பாக அமைக்கப்பட்ட குழு அளித்த பரிந்துரையை ஏற்று பத்து மடங்கு வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தொடர்பான ஆவணங்கள் ஒப்படைப்பு

News Editor

திமுக பிரமுகரிடம் கொல்லையடித்த மர்ம நபர் கைது !

News Editor

தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு- முதல்வர் அறிவிப்பு…

naveen santhakumar