இந்தியா

சிசிடிவியில் சிக்கிய அவலக் காட்சி….. குழந்தையை அடித்து உதைத்து கழுத்தை நெறித்த கொடூரத் தாய்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஒடிசா:

கொடூர தாய் ஒருவர், 15 மாத குழந்தையை கொஞ்சம் கூட ஈவு, இரக்கமின்றி  உதைத்தும், கழுத்தை நெறிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

மேலும் இந்த  வீடியோ பார்ப்பவர்களின் கண்களில் ரத்தக் கண்ணீரை வர வைக்கும் அளவு உள்ளது.

ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்திலுள்ள  கோப் என்ற பகுதியில் தான், இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒடிசாவில் ஒரு பெண்ணுக்கு 15 மாத குழந்தை உள்ளது. அந்தக் குழந்தையை அந்தப்பெண் கொடூரமாக அடித்து உதைக்கும் காட்சி வீட்டில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அதனைக் கண்ட அந்த பெண்ணின் கணவர் சிசிடிவி காட்சிகளுடன் போலீசில் தன் மனைவியின் மீது புகார் அளித்தார். இதனை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மாற்றான் தாய் பிள்ளைகளை எவ்வாறு கொடுமைப் படுத்துவார்களோ,  அதைவிட அதிகமாக அந்த குழந்தையை அந்த பெண்மணி கொடுமைப்படுத்தியது அனைவரையும் அதிர்ச்சியாக்கியது.

ALSO READ  டாப் 10 பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம்

குழந்தையை கண்மூடித்தனமாக அடித்தும், உதைத்தும், ஒரு கட்டத்தில் கழுத்தை நெரித்து கொன்ற கொடூர காட்சிகள் கேமராவில் பதிவாகியிருந்தன.

மேலும் தன் மனைவி பற்றி புகார் அளித்த கணவர் எனது குழந்தையை இந்த அளவுக்கு கொடுமைப்படுத்துவது மட்டுமல்லாமல் எனது பெற்றோர்களையும் நிறைய நேரங்களில் கொடுமைப்படுத்துகிறார். நான் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பும் பொழுது, எனது குழந்தையின் உடலில் காயங்கள் இருக்கும்.  இதனை கண்காணிக்கவே நான் வீட்டில் சிசிடிவி கேமராவை பொருத்தினேன் என்று போலீசாரிடம் தெரிவித்தார்.

ALSO READ  ராஜேந்திர பாலாஜி டெல்லியில் தலைமறைவு?… தட்டித்தூக்க விரைகிறது தனிப்படை!

 மேலும் இந்த கொடூரக் காட்சிகளை அந்த பெண்ணின் கணவர் சமூக வலைதளங்களிலும் பதிவேற்றியுள்ளார் இதுகுறித்து அந்த பெண்ணை காவல்நிலையத்திற்கு அழைத்து போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில் எனது மாமனார் மாமியார் என்னை கொடுமை செய்கின்றனர். சாப்பிடுவதற்கு உணவுகூட தருவதில்லை. அந்த விரக்தியில்  தான் நான் என்ன செய்வதென்று தெரியாமல் என் குழந்தையை, இவ்வாறு செய்து விட்டேன் என்று அந்த பெண்மணியை தெரிவித்தார். 

மேலும் இதுகுறித்து போலீசார் இரு தரப்பினரிடமும் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

புதுச்சேரியில் ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை !

News Editor

தோனியை தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு… 

naveen santhakumar

இந்திய ஹாக்கி லெஜண்ட் பல்பீர் சிங் சீனியர் காலமானார்…

naveen santhakumar