எகிப்தின் சைவா ஓசிஸ்(siwa oasis) என்ற கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமையன்று அரங்கேறியுள்ளது.
மனைவியை வெள்ளிக்கிழமை கொல்ல திட்டமிட்டதன் காரணத்தையும் அந்த நபர் போலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை இஸ்லாமியர்களுக்கு முக்கியமான நாள் என்பதால், இறந்தவர்களுக்கு மன்னிப்பு கோருவதற்காக பலர் இறுதி பிரார்த்தனை செய்வார்கள்.அதனால் தான் கொலை செய்வதற்கு அந்த கிழமையை தேர்ந்தெடுத்தேன் என அந்த நபர் கூறியுள்ளார்.
51 வயதான கயானா(guyana) நாட்டவரான அந்த நபர் தமது 42 வயதான எகிப்திய(egypt) மனைவியை தூக்கத்தில் சுத்தியலால் தாக்கி கொலை செய்துள்ளார்.
அவருடன் வாழ்ந்த வாழ்க்கை சலிப்பை ஏற்படுத்தியதால், கொலை செய்ய திட்டமிட்டதாக அந்த நபர் விசாரணையின்போது அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.இஸ்லாமியர்களின் பாரம்பரியம் மற்றும் இறுதி பிரார்த்தனையின் ஒரு பகுதியாக, மரணமடைந்தவர்கள் சடலத்தை சில மணி நேரத்துற்குள் குளிப்பாட்ட வேண்டும்.
இதற்காக, அந்த கிராமத்தில் உள்ள சில பெண்களை அந்த கணவர் அழைத்துள்ளார். ஆனால் அந்த பெண்கள், ஒரு சுகாதார அதிகாரியின் ஒப்புதல் இன்றி, தாங்கள் சடலத்தை குளிப்பாட்ட முடியாது என மறுத்துள்ளனர்.காரணம், அந்த சடலத்தின் தலையில் ரத்தக்காயம் இருந்துள்ளதை குறித்த பெண்கள் கவனித்துள்ளனர்.
தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் அந்த சம்பவத்தை போலிசாரிடம் தெரிவித்தனர்.தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு வந்த போலிசார், குறித்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், கொலை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
மேலும் நடந்தவற்றை அவர் போலிசாரிடம் ஒப்புவித்துள்ளார். பாரம்பரிய முறைப்படி வாழ்க்கை நடத்தும் எகிப்தின் சைவா(siwa oasis) கிராம மக்களை பொறுத்தவரை இதுபோன்ற ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியது இதுவே முதன் முறை என கூறப்படுகிறது.