தமிழகம்

எல்லா கதைக்கும் இரண்டு பக்கங்கள்…. இருவர் சொல்வதும் உண்மை செல்வதும்…ஒன் டே டூ கோ….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க இன்னும் ஒரே நாள் மட்டுமே உள்ள நிலையில் அசத்தல் புரமோ ஒன்று வெளியாகியுள்ளது.சின்னத்திரையின் முக்கிய நிகழ்ச்சியாக பார்க்கப்படும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நாளை முதல் தொடங்க உள்ளது.

நாளை மாலை கிராண்டாக தொடங்க உள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி. முன்பே தொடங்க வேண்டிய பிக்பாஸ் நிகழ்ச்சி கொரோனா காரணமாக நெடும் தாமதத்திற்கு பிறகு தற்போது தொடங்குகிறது.

நாளை மாலை 6 மணிக்கு பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் போட்டியாளர்களின் அறிமுகம் கலை நிகழ்ச்சிகளோடு நடைபெற இருக்கிறது.போட்டிக்கு தேர்வாகியுள்ள பிரபலங்கள் ஸ்டார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இன்னமும் போட்டியாளர்கள் பங்கேற்பதில் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கிராண்ட் ஓபனிங் இன்று ஷுட் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிகழ்ச்சிக்கான புரமோ கடந்த சில நாட்களாக ஒளிபரப்பாகி வருகிறது.

ALSO READ  நினைவு நூலகமாக மாறும் கி.ராவின் இல்லம் !

பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகர் கமல்ஹாசன் ஒவ்வொரு நாளாய் எண்ணிக்கொண்டிருக்கிறார். 5 நாட்கள், 4 நாட்கள், 3 நாட்கள் என கூறி ஒவ்வொரு பஞ்ச் டயலாக்குடன் கூறி வந்த கமல்ஹாசன் இன்று இன்னும் ஒரே நாள்தான் என்று பேசும் புரமோ வெளியாகியுள்ளது.

ALSO READ  மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்…!

அதிலும் வழக்கம் போல பஞ்ச் வசனம் பேசியிருக்கிறார் கமல். அதாவது “எல்லா கதைக்குமே இரண்டு பக்கங்கள் இருக்கு……இருவர் சொல்வதும் உண்மை வெல்வதும்….ஒன் டே டூ கோ” என ஸ்டைலாக முடித்திருக்கிறார்.இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சிலிண்டர் விலை உயர்வு பேரிடி… விமர்சித்த சீமான்!

News Editor

சீமான் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு…

naveen santhakumar

புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்..?பி.எஸ்.பி.பி  பள்ளி முதல்வரிடம் 2 வது நாளாக விசாரணை !

News Editor